Kovai | Children Missing | பெற்றோர் செய்த செயல் - வீட்டை விட்டு ஓட்டம் பிடித்த 5 பள்ளி மாணவர்கள்..
Kovai | Children Missing | பெற்றோர் செய்த செயல் - வீட்டை விட்டு ஓட்டம் பிடித்த 5 பள்ளி மாணவர்கள்.. கோவையில் அதிர்ச்சி - ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் வீட்டில் சுதந்திரம் இல்லை என கூறி வீட்டை விட்டு வெளியேறிய சூலூர் அரசுப் பள்ளி மாணவர்கள் 5 பேரை, போலீசார் 8 மணி நேரத்திற்குள் பத்திரமாக மீட்டுள்ளனர். கோவை மாவட்டம் சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் 5 மாணவர்கள், பள்ளி முடிந்த பிறகு வழக்கம்போல் வீடு திரும்பாததால் அவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மாணவர்களின் செல்போன் சிக்னலை வைத்துக் கண்காணித்த சூலூர் காவல்துறையினர், ரயிலில் பயணித்த அவர்களைத் திருப்பூரில் வைத்து மீட்டனர். விசாரணையில் பெற்றோர் விதித்த கட்டுப்பாடுகளால் மன உளைச்சல் அடைந்து வெளியேறியதாக மாணவர்கள் கூறியதை அடுத்து, இருதரப்பினருக்கும் உரிய கவுன்சிலிங் வழங்கி மாணவர்களைப் பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
