Kovai | தாயை பிரிந்த கருஞ்சிறுத்தை குட்டி - மருதமலையில் பாசப்போராட்டம்
கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த கருஞ்சிறுத்தை குட்டியை வனத்துறையினர் மீட்டுள்ளனர். தாயுடன் உணவு தேடி ஊருக்குள் வந்த சிறுத்தை குட்டி, மருதமலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் சுற்றி திரிந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் கருஞ்சிறுத்தை குட்டியை மீட்டனர். தொடர்ந்து, அந்த குட்டியை தாய் சிறுத்தையுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட உள்ளனர்.
Next Story
