கோவை மாவட்டம் குனியமுத்தூரில் நேற்றிரவு மர்ம நபர்கள் தாக்கியதில், இந்து முன்னணி பிரமுகர் படுகாயமடைந்தார். குனியமுத்தூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகி பெரியசாமி. இவர் அப்பகுதியில் பானிபூரி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு கடையில் இருந்த பெரியசாமியை மர்மநபர்கள் இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு, தப்பியோடி உள்ளனர். படுகாயமடைந்த பெரியசாமியை மீட்டு பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்