சென்னை தீவுத்திடல் அருகே கூவம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக உயர் அதிகாரிகளை சந்தித்து முறையிட உள்ளதாக எம்.பி.திருமாவளவன் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த அவர், குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் பேசுகையில் மக்களை மீண்டும் குடியமர்த்துவதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார் உள்ளதாகவும் இது தொடர்பாக உயர் அதிகாரிகளை சந்தித்து முறையிட உள்ளதாகவும் தெரிவித்தார்.