

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சயன், மனோஜ் உள்ளிட்ட 9 பேர் கைதான நிலையில், வழக்கு விசாரணைக்காக அவர்கள் ஊட்டி அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, வழக்கின் 5-வது சாட்சியிடம், நீதிபதி வடமலை விசாரணை மேற்கொண்டார்.