இன்று மீண்டும் நிலவிய உறைபனி - சுற்றுலா பயணிகள் கடுமையாக பாதிப்பு

கொடைக்கானல் பகுதியில் இன்று மீண்டும் உறைபனி நிலவியதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இன்று மீண்டும் நிலவிய உறைபனி - சுற்றுலா பயணிகள் கடுமையாக பாதிப்பு
Published on
கொடைக்கானல் பகுதியில் இன்று மீண்டும் உறைபனி நிலவியதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கொடைக்கானலில் ஜனவரி மாதம் முதல் வாரத்தில், உறைபனி நிலவிய நிலையில், கடந்த ஒரு மாதமாக நீர்ப்பனி நிலவி வந்தது. குளிர் காலம் முடிவடைய உள்ள நிலையில் இன்று காலை ஏரிச்சாலை, ஜிம்கானா, கீழ் பூமி உள்பட பல்வேறு பகுதிகளில் உறைபனி நிலவியது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வெளியே வர முடியாமல், கடுமையாக பாதிக்கப்பட்டனர். வாகனங்களையும் இயக்க முடியாமல் கடும் அவதிப்பட்டனர்.
X

Thanthi TV
www.thanthitv.com