"50 வருடம் உழைத்திருக்கேன்..! எனக்கு மேயர் சீட் இல்லையா" அமைச்சர் உடன் பெண் வாக்குவாதம்.. கோவையில் பரபரப்பு

"50 வருடம் உழைத்திருக்கேன்..! எனக்கு மேயர் சீட் இல்லையா" அமைச்சர் உடன் பெண் வாக்குவாதம்.. கோவையில் பரபரப்பு
Published on

கோவை மாநகராட்சி மேயர் மறைமுக தேர்தலையொட்டி, சலசலப்புகளை தவிர்க்க, மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள தனியார் மண்டபத்திற்கு தி.மு.க மாமன்ற உறுப்பினர்கள் வரவழைக்கப்பட்டனர். கவுன்சிலர்களுக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி ஆகியோர் அறிவுரை வழங்கினர். அப்போது, 63வது வார்டு உறுப்பினர் சாந்தி முருகேசன், 50 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்த தனக்கு மேயர் வேட்பாளராக சீட் வழங்கவில்லை எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com