திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் மறியல்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் மறியல்
Published on
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நெடுங்காம்பூண்டி கிராமத்தில் கடந்த 5 மாதமாக குடிநீர் இன்றி கிராமமக்கள் தவித்து வருகின்றனர். இது குறித்து புகார் அளித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, 200-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் திருவண்ணாமலை - திண்டிவனம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து, பெண்கள் கலைந்து சென்றனர். இந்தப் போராட்டம் காரணமாக 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
X

Thanthi TV
www.thanthitv.com