கீழடியில் விலங்கின் எலும்பு கூடு கண்டுபிடிப்பு - காமராசர் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைப்பு

சிவகங்கை மாவட்டம், கீழடி 6ம் கட்ட அகழாய்வில் விலங்கின் எலும்பு கூடு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கீழடியில் விலங்கின் எலும்பு கூடு கண்டுபிடிப்பு - காமராசர் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைப்பு
Published on

சிவகங்கை மாவட்டம், கீழடி 6ம் கட்ட அகழாய்வில் விலங்கின் எலும்பு கூடு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி ஆறாம் கட்ட அகழாய்வில், கிழக்கு பகுதியில் உள்ள குழியில் இருந்து நீண்ட எலும்பு கண்டறியப்பட்டுள்ளது. முதுகெலும்பு, விலா எலும்புகள் உள்ளிட்டவைகள் இதில் உள்ளன. இது விலங்கின் எலும்பு கூடாக இருக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இவை மதுரை காமராசர் பல்கலை கழக உயிரியல் பிரிவிற்கு ஆய்விற்கு அனுப்பபட உள்ளன.

X

Thanthi TV
www.thanthitv.com