Keeladi Museum -நாளை திறந்து வைக்கிறார் CM ஸ்டாலின்
Keeladi Museum -நாளை திறந்து வைக்கிறார் CM ஸ்டாலின்
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 24 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பில் 4.5 ஏக்கர் பரப்பளவில் திறந்தவெளி அருங்காட்சியம் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு காட்சி கூடங்களுடன் பணிகள் நிறைவடைந்துள்ள இந்த அருங்காட்சியத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைக்கிறார். கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட சங்ககாலப் பொருட்கள் மற்றும் பழமையான குடியிருப்பு சுவடுகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. தமிழர் நாகரிகத்தின் தொன்மை மற்றும் சிறப்பை வெளிப்படுத்தும் முக்கிய முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
