Karur | திருட வந்த வீட்டையே பாராக மாற்றிய திருடன் - சரக்கடித்து, சாப்பிட்டு சென்ற அதிர்ச்சி

Karur | திருட வந்த வீட்டையே பாராக மாற்றிய திருடன் - சரக்கடித்து, சாப்பிட்டு சென்ற அதிர்ச்சி

திருட வந்த வீட்டையே பாராக மாற்றிய திருடன் - சரக்கடித்து, வயிறு முட்ட சாப்பிட்டு சென்ற அதிர்ச்சி கரூரில் திருட வந்த வீட்டிலேயே மது அருந்தி, சமைத்து வைத்த உணவை சாப்பிட்டுச் சென்ற திருடனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தாந்தோணிமலை பாரதிதாசன் நகர் பகுதியைச் சேர்ந்த சுப்புலட்சுமி வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர், பீரோவில் இருந்த 8 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளார். மேலும், வீட்டிலேயே அமர்ந்து மது அருந்தியதுடன், சமையலறையில் இருந்த உணவையும் சாப்பிட்டுச் சென்றுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com