Karur | Crime | ரத்த வெள்ளத்தில் கிடந்த மூதாட்டி | கழுத்தில் காயங்களுடன் மீட்கப்பட்ட மகள்
Karur | Crime | ரத்த வெள்ளத்தில் கிடந்த மூதாட்டி | கழுத்தில் காயங்களுடன் மீட்கப்பட்ட மகள் | கரூரில் பரபரப்பு சம்பவம் #karur #crime #tnpolice #thanthitv கழுத்தில் ரத்தக்காயங்கள் - 65 வயது மூதாட்டி பலி -சொத்து தகராறில் கொலை? கரூர் மாவட்டம் குளித்தலை அருகே எம்.ஆர் பட்டியில், கழுத்தில் ரத்தக்காயங்களுடன் 65 வயது மூதாட்டி பாப்பம்மாள் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது... அவரது மகள் மஞ்சுளாவும் கழுத்தில் காயங்களுடன் மீட்கப்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சொத்து மற்றும் பள்ளிச் சான்றிதழ்கள் கேட்டு பாப்பம்மாளின் பேத்தி சுகி வந்து சென்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இது தொடர்பாக மாவட்ட எஸ்பி ஹரிகிரண் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
