கர்நாடகாவில் நடந்த நிலச்சரிவிலும் கேரளாவுக்கு தான் அதிர்ச்சி செய்தி
கர்நாடகாவில் நடந்த நிலச்சரிவிலும் கேரளாவுக்கு தான் அதிர்ச்சி செய்தி - கடவுள் தேசத்தை சுழற்றியடிக்கும் சாபம்
கர்நாடகாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் மாயமான கேரள லாரி ஓட்டுநர் அர்ஜுன் என்பவரை தேடும் பணியை தொடர வேண்டுமென அம்மாநில முதல்வருக்கு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில், கோழிக்கோடு கண்டிக்கலில் உள்ள லாரி ஓட்டுநர் அர்ஜுன் இல்லத்திற்கு, பினராயி விஜயன் சென்றார். மேலும், அர்ஜுனின் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படுமென அவர் உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து, அர்ஜுனை தேடும் பணியை தொடர வேண்டுமென கர்நாடக முதல்வர் சித்தராமையாவிற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
