கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழை, புயல் ஏற்பட்டால், மீட்பு படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் பிரசாத் மு வடநேரே தெரிவித்துள்ளார். நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.