

கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் வள்ளவிளை மீனவ கிராமத்தில் 5 வீடுகள் இடிந்து சேதம் அடைந்தது. வீடுகளை இழந்தவர்கள் தங்களது உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். மேலும் பல வீடுகள் இடியும் நிலையில் உள்ளதால், கடல் அலை தடுப்பு சுவர் கட்டும் பணியை துரித படுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிள்ளியூர் சட்ட மன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார், கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் அளித்தார்