திடீரென குறுக்கே வந்த நாய்.! பைக்கில் சென்ற காவலருக்கு நேர்ந்த கொடூரம்.. கன்னியாகுமரியில் அதிர்ச்சி

x

கன்னியாகுமரி அருகே, சாலையின் குறுக்கே நாய் வந்ததால், இருசக்கர வாகனத்தில் வந்த தலைமைக் காவலர், நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். நித்திரவிளை அருகே செம்மான்விளை பகுதியை சேர்ந்த பெனடிக்ட் என்பவர், மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தார். கடந்த 7 ம் தேதி நடக்காவு பகுதி வழியாக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, நாய் ஒன்று குறுக்கே வந்ததில் பெனடிக்ட் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்