Kanniyakumari | கிடுகிடுவென எகிறிய விலை.. இல்லத்தரசிகளுக்கு வந்த ஷாக் நியூஸ்
Kanniyakumari | கிடுகிடுவென எகிறிய விலை.. இல்லத்தரசிகளுக்கு வந்த ஷாக் நியூஸ்
கன்னியாகுமரி மாவட்டத்தில் காய்கறி வரத்து குறைவால் விலை உயர்வு பொதுமக்களை வெகுவாக பாதித்துள்ளது. நாகர்கோவில் சந்தைகளில் கடந்த சில நாட்களாக காய்கறி விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஓசூர், பெங்களூர், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் காய்கறி வரத்து குறைந்ததுடன், கடும் கோடை வெயிலும் உற்பத்தியை பாதித்ததால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி ஒரு கிலோ தக்காளி 40 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 80 ரூபாய்க்கும், பீன்ஸ் 110 ரூபாய்க்கும், கத்திரிக்காய் மற்றும் சின்ன வெங்காயம் 65 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.
