Kanniyakumari | Accident | நேருக்கு நேர் பைக்குகள் மோதிய அந்த நொடி - போதை ஆசாமியால் நேர்ந்த விபரீதம்
குடிபோதையில் வந்த வாகன ஓட்டியால் நகராட்சி ஊழியர்கள் காயம்
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே குடிபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபரால் நகராட்சி ஊழியர்கள் காயம் அடைந்தனர். கொல்லங்கோடு நகராட்சி ஊழியர்கள் இருவர் வரி வசூல் செய்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இவர்களது வாகனத்தின் மீது குடிபோதையில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த மற்றொரு நபர் நேருக்கு நேர் மோதினார். இதில் நகராட்சி ஊழியர்கள் இரண்டு பேரும் காயம் அடைந்தனர்.
