காஞ்சிபுரம் மாவட்டம் குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கந்த சஷ்டி விழா கடந்த வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று இரவு சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையொட்டி, இன்று அதிகாலை முதலே சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவில் பிரகாரத்தை 108 முறை சுற்றி சாமி தரிசனம் செய்தனர்.