

சாலை ஓரம் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பம்கள், கல்வெட்டுகளை கணக்கெடுத்து அகற்றுவதற்கு மாவட்ட நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் மேட்டுத்தெரு பகுதியிலிருந்து பாலாறு வரை உள்ள கொடிக்கம்பம் மற்றும் கல்வெட்டுகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி மாவட்ட நிர்வாகத்திடம் நெடுஞ்சாலைத் துறை அறிக்கை சமர்ப்பித்தது.அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெளியே அமைந்துள்ள அரசு சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள் அகற்றி அப்புறப்படுத்தப்பட்டது.