விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் காமராசர் சிலை அவமதித்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இனி வரும் காலங்களில் இத்தகைய நிகழ்வுகள் நடக்காததை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.