மாமியாரின் கூரை வீட்டை தீ வைத்து எரித்த மருமகன் - கள்ளக்குறிச்சியில் பரபரப்பு
சங்கராபுரம் அடுத்த உலகலபாடி கிராமத்தில் மாமியாரின் கூரைவீட்டை குடிபோதையில் மருமகன் தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அல்லி என்ற நபரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
