காளஹஸ்தி சிவன் கோயிலில் குரு பௌர்ணமியையொட்டி கோயில் வளாகத்தில் ஊஞ்சல் சேவை நடத்தப்பட்டது. சந்திர கிரகணத்தை தொடர்ந்து, அனைத்து கோயில்களிலும் நடை சாத்தப்பட்ட நிலையில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் மூலவருக்கு சூரிய சந்திர கிரகண தோஷம் ஏற்படாது என்பதால் நடை அடைக்கப்படவில்லை. வழக்கம்போல் கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.