"ஏமாற்றியவருக்கு ஆதரவாக போலீஸ்"... காவல் நிலையம் முன்பு குழந்தையுடன் போராட்டத்தில் இறங்கிய பெண் - கோவையில் பரபரப்பு

x

நகையை ஏமாற்றியவருக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாக குற்றம்சாட்டி, கோவையில் பெண் ஒருவர் குழந்தையுடன் போராட்டம் நடத்தினார். பெங்களூரை சேர்ந்த காவ்யா என்பவர், கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்த பிரபு என்பவரிடம் 36 கிராம் தங்க நகைகள் கொடுத்த‌தாக கூறியுள்ளார். சேதமடைந்த 10 கிராம் நகை மட்டுமே கொடுத்துள்ளதால், தனது நகையை வாங்கித் தருமாறு போலீசில் புகார் அளித்திருந்தார். விசாரணையில், தங்க காசாக கொடுத்துவிடுவதாக பிரபு கூறியுள்ளார். இதை ஏற்க மறுத்த காவ்யா தனது நகையே வேண்டும் என்றும், மோசடி நபருக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டி போராட்டம் நடத்தினார். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு, புதிய நகை வாங்கிக் கொள்ள ஒப்புதல் அளித்து காவ்யா புறப்பட்டு சென்றார்.


Next Story

மேலும் செய்திகள்