#JUSTIN திடீரென போராட்டத்தில் குதித்த செவிலியர்கள் - சென்னையில் குவியும் போலீசார்

x

திமுக அரசின் முக்கிய தேர்தல் வாக்குறுதியான எம்ஆர்பி செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எம் ஆர் பி செவிலியர்கள் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்

தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து போராட்டத்தில் பங்கேற்க வந்த செவிலியர்களை காவல்துறையினர் கைது செய்தனர்

நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிரந்தர பணியிடங்களை உருவாக்க வேண்டும் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் தற்காலிக செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் , பணி வரன்முறை செய்ய வேண்டும் மற்றும் திமுக அரசின் முக்கிய தேர்தல் வாக்குறுதியான எம்ஆர்பி செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்யபடும் என்ற வாக்குறுதி உட்பட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் 700க்கும் மேற்பட்ட சங்கத்தினர் இன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகைப் போராட்டம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் குவிக்கப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை கைது செய்ததுடன் சமுதாய நலக்கூடத்தில் அடைத்தனர்.




Next Story

மேலும் செய்திகள்