ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலம்

ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலம்
Published on

புதுக்கோட்டை அன்னவாசல் அருகே கீழக்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

ஸ்ரீ கலங்காத கண்ட அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகளும் 250 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் இரண்டு காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் போக்கு காட்டி சென்றது. போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும் காளைகளுக்கும் சேர், அன்டா, சைக்கிள், ரொக்க பணம் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டு வருகிறது. ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com