வரும் 4ம் தேதி முதல் நடக்கும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்க போவதில்லை என தமிழ்நாடு அரசு அலுவலர்கள் ஒன்றியம் அறிவித்துள்ளது. அமைச்சர் ஜெயக்குமாருடன் தலைமை செயலாகத்தில் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு அரசு அலுவலர்கள் ஒன்றியத்தின் மாநில தலைவர் சண்முகராஜன் இதனை தெரிவித்தார். தங்களது கோரிக்கைகளை முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டுசென்று, உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தை தொடர்ந்து, போராட்டத்தை கைவிடுவதாக அவர் தெரிவித்தார்.