தாயின் மறைவுக்கு சென்றது குற்றமா..? ரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவி"சைக்கோ" கணவன் செய்த படுபாதகம்

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே மனைவியை அம்மி கல்லால் அடித்து கொன்ற கணவன், தானே காவல்நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சின்னசேலம் அருகேயுள்ள நாககுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராமர். இவருக்கு சின்னப்பிள்ளை என்பவருடன் திருமணமாகி மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில், கடந்த சில வருடங்களாக ராமருக்கும், அவரது மாமியாருக்குமிடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு ராமரின் மாமியார் உயிரிழந்திருக்கிறார். இதில், தாயின் இறுதி சடங்கு நிகழ்ச்சிகளில் ராமரிடம் கேட்காமல், அவருடைய மனைவி சின்னபிள்ளை கலந்து கொண்டதாகவும், இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதேபோல் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில், மனைவியை அம்மிக் கல்லால் அடித்து கொன்ற ராமர், தானே போலீசில் சரண்டைந்தது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், சரணடைந்த கணவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்