

இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து தொடர்பான விசாரணைக்கு, நடிகர் கமல்ஹாசன் நேரில் ஆஜரானார். ஏற்கனவே இயக்குனர் ஷங்கர் ஆஜராகி விளக்கம் அளித்த நிலையில், நடிகர் கமல்ஹாசனுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து இன்று வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த கமல்ஹாசன், மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் நாகஜோதி விசாரணை நடத்தினார்.