"அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் உயர்வு" - தமிழக அரசு ஆய்வறிக்கை
"அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் உயர்வு" - தமிழக அரசு ஆய்வறிக்கை
தமிழக அரசு, முதல்முறையாக 45,000-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் 3, 5, 8ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில், மாணவர்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்பட்டுள்ளனர் என மாநில திட்டக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார். கணிதத்தில் 8ம் வகுப்பினர் பின்தங்கியுள்ளதாகவும், சமூக அறிவியலில் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எண்ணும் எழுத்தும் திட்டம் கைகொடுத்திருப்பதாகவும், வரும் காலங்களிலும் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது...
Next Story