ஓமலூர் சுற்றுவட்டார கிராமங்களில் சட்டவிரோதமாக கலப்பட மதுபானங்கள் விற்பனை செய்வதாக, போலீசாருக்கு புகார் எழுந்தது. இதனையடுத்து சேலம் மாவட்ட எஸ்.பி உத்தரவின் பேரில், ஓமலூர், தாரமங்கலம், தீவட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில், சந்துக்கடைகள் அமைத்து, மதுபானம் விற்பனை செய்த,15 பேரை போலீசார் கைது செய்தனர்.