அடையாள அட்டை அணிய வேண்டியது அவசியம் - அரசு அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பணியின் போது அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணிவது அவசியம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அடையாள அட்டை அணிய வேண்டியது அவசியம் - அரசு அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
Published on
ஈரோட்டை சேர்ந்த வள்ளி நாராயணன் என்பவர், கடந்த 1986ம் ஆண்டு பிறப்பித்த அரசாணையின் படி, பணியின்போது அரசு ஊழியர்கள் பெயர் பட்டையை அணிவதை அமல்படுத்துமாறு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பினார். இதையடுத்து, தலைமை நீதிபதி இந்திரா பனர்ஜி, நீதிபதி ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு தாமாக முன்வந்து, அந்த கடிதத்தை வழக்காக விசாரித்தனர். விசாரணையை தொடர்ந்து, பெயர் பட்டை அணியும் பழைய நடைமுறைக்கு பதிலாக அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
X

Thanthi TV
www.thanthitv.com