I Periyasamy | ``ED வழக்கு முறியடிப்பு'' - அமைச்சர் ஐ.பெரியசாமி
I Periyasamy | ``ED வழக்கு முறியடிப்பு'' - அமைச்சர் ஐ.பெரியசாமி
அமலாக்கத்துறையின் பொய் வழக்கு முறியடிக்கப்பட்டதாக அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி அமலாக்கத்துறை பொய்யான வழக்கு தொடர்ந்ததால் அதனை நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாகவும், நீதி வென்றுள்ளதாகவும் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். கடந்த 2008-ஆம் ஆண்டு வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகக் கூறி, அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. கொடைக்கானலில் தங்கியுள்ள முதலமைச்சர் ஸ்டாலினை சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, அமலாக்கத்துறையின் பொய் வழக்கு நீதிமன்றத்தின் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
