``காதலித்து திருமணம் செய்தவரை காணவில்லை'' - பெண் எடுத்த முடிவு

தாம் காதலித்து திருமணம் செய்தவரை காணவில்லை என சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு இளம் பெண் போராட்டத்தில் ஈடுபட்டார்.

கோயம்புத்தூரைச் சேர்ந்த ஷாமிலி என்ற இளம் பெண், தன்னை காதலித்து திருமணம் செய்த குகன் என்பவர், திருமணத்திற்குப் பிறகு மானாமதுரைக்கு சென்று, அவரது குடும்பத்துடன் வாழ்ந்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

குகனை தேடி அவரது வீட்டிற்கு சென்ற போது, குகனின் தாய் சாதியை காரணமாகக் கூறி வீட்டைவிட்டு வெளியேற்றியதாகவும் ஷாமிலி புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com