Husband Wife Love | கணவன் இறந்த அதிர்ச்சியில் மறுநொடியே மனைவியும் மரணம்
கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவி மரணம்
கடலூர் மாவட்டம் புவனகிரியில் ஒரே நாளில் கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை ஊழியர் ராமு, மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கணவர் இறந்த செய்தியை அறிந்த அவரது மனைவி சாவித்திரியும் மரணமடைந்த நிலையில், இருவரது கண்களும் குடும்பத்தாரின் ஒப்புதலுடன், தானமாக வழங்கப்பட்டன..
Next Story
