Nellai || குடும்ப தகராறில் அரிவாளால் வெட்டிய கணவன் துடிதுடித்து பலியான மனைவி

x

நெல்லை பேட்டை குடிசை மாற்று வாரிய காலனியில் கணவன் - மனைவிக்கு இடையேயான தகராறில் அரிவாளால் வெட்டப்பட்ட இசக்கியம்மாள் என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 10 ஆம் தேதி வீட்டில் கணவர் பாஸ்கரு க்கும், இசக்கியம்மாளுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் வாக்குவாதம் முற்றியதில், பாஸ்கர் மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினார். இதை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இசக்கியம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, கணவர் பாஸ்கர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.



Next Story

மேலும் செய்திகள்