காஞ்சிபுரம் மாவட்டம் செரப்பணஞ்சேரி அண்ணா நகரைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரது 22 வயது மகன் பாலாஜி ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இருசக்கர வாகனத்தில் வெளியே சென்ற அவர் லாரி மோதிய விபத்தில் உயிரிழந்தார். ஓராண்டுக்கு முன் ரசிதா என்ற 20வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்த நிலையில் கணவனின் இறப்பை தாங்கமுடியாமல் அவரது மனைவி அழுதுகொண்டே இருந்துள்ளார். இந்த நிலையில் துக்கம் தாங்க முடியாத பாலாஜியின் மனைவி ரசிதா வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். கணவர் இறந்த துக்கம் தாளாமல் காதல் மனைவி தற்கொலையான சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.