"குலத்தொழிலை ஊக்குவிக்கும் விஸ்வகர்மா திட்டத்தை எப்படி ஏற்க முடியும்?" - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

x

குலத்தொழிலை ஊக்குவிக்கும் விஸ்வகர்மா திட்டத்தை மனசாட்சி உள்ள ஒருவர் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்? என்று முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில், கலைஞர் கைவினைத் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், 8 ஆயிரத்து 951 பயனாளிகளுக்கு 34 கோடி ரூபாய் மானியத்துடன் 170 கோடி ரூபாய் கடன் ஒப்புதல் ஆணைகளை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், விஸ்வகர்மா திட்டத்திற்கு மாற்றாக சமூகநீதி, சமத்துவம் மற்றும் மனித உரிமையை நிலைநாட்டும் வகையில் கலைஞர் கைவினைத் திட்டம் உருவாக்கப்பட்டதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்