மடமடவென இடிக்கப்பட்ட வீடுகள் - அதிரடி காட்டிய அதிகாரிகள்.. கலங்க வைத்த சம்பவம்

x

கிருஷ்ணகிரியில், திருக்கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரசித்தி பெற்ற பிரசன்ன பார்வதி சமேத சந்திர மௌளீஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து, 9 குடும்பங்கள் வீடுகள் கட்டியிருந்தன. இக்கோயில், இந்து சமய அறநிலையத்துறையின் கண்காணிப்பில் உள்ள நிலையில், ஆக்கிமிப்பை அகற்ற உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து, அங்கு குடியிருந்தவர்கள் வீட்டினை காலி செய்த நிலையில், ஜேசிபி இயந்திரம் கொண்டு வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்