

ஓசூர் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தது. உளியமங்கலம் கிராமத்தை சேர்ந்த ரூபேசும், சில்பாவும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை வெளியேறி தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் தலைமையில் ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர்கள் தஞ்சம் அடைந்தனர்.