Kanniyakumari | Crime | விடுதியில் திடீர் ரெய்டு விட்ட போலீசார் | சிக்கிய கேரள பெண் உட்பட 5 பேர்
விடுதியில் ரெய்டு - கேரள பெண் உட்பட 5 பேர் கைது கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் அருகே, தங்கும் விடுதி என்ற பெயரில் விபச்சாரத்தில் ஈடுபட்ட கேரள பெண் உட்பட ஐந்து பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். தேவிகோடு பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் சமூக விரோதச் செயல்கள் நடப்பதாக வந்த புகாரைத் தொடர்ந்து, மாவட்ட எஸ்.பி. உத்தரவின் பேரில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இதில் கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண் மற்றும் நான்கு இளைஞர்கள் பிடிபட்டனர். கைதானவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள விடுதி உரிமையாளரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். எல்லைப் பகுதியில் அரங்கேறிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
