

திருச்சி மணப்பாறையை அடுத்த செவலூர் கிராமத்தில் நாட்டாமையாக இருந்த முத்துவீரலெக்கப்பன் உயிரிழந்ததை அடுத்து, அவரது மகனான வினோத்குமாருக்கு நாட்டாமை பட்டம் வழங்கும் நிகழ்வு நடத்தப்பட்டது. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஊர் நாட்டாண்மைகள் பரிபட்டம் கட்ட, பழங்கால முறைப்படி குதிரைகளின் நடனம் மற்றும் யானை மீது பரிபட்டம் கட்டப்பட்டவர்கள் அமர்ந்து நடந்த ஊர்வலம் என விழா களைகட்டியது. இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.