

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில், நீர்வரத்து வினாடிக்கு 4000 கன அடியில் இருந்து, 5000 கன அடியாக அதிகரித்துள்ளது. கேரளா, கர்நாடகா மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கன மழையால் கர்நாடக அணைகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி ஆகிய இரு அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட 5000 கன அடி உபரிநீர் நேற்று தமிழக எல்லையான பிலிக்குண்டுலு வழியாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வந்தடைந்தது. இதனால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 4000 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 5000 கன அடியாக அதிகரித்துள்ளது.