பாமக நகர செயலாளர் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் - இந்து முன்னணியை சேர்ந்த 50 பேர் கைது

திருபுவனத்தில் பாமக முன்னாள் நகர செயலாளர் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து நாகையில் இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாமக நகர செயலாளர் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் - இந்து முன்னணியை சேர்ந்த 50 பேர் கைது
Published on
திருபுவனத்தில் பாமக முன்னாள் நகர செயலாளர் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் நாகையில் இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி இந்து முன்னணியினர் 50 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே நாகை அவுரித்திடலில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவை சேர்ந்த 30 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com