வறுமை ஒழிப்புக்கான புதிய திட்டம்..! மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி | High Court

x

வறுமை ஒழிப்புக்கான புதிய திட்டங்கள் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நகர்ப்புறங்களில் வீடற்றவர்களுக்கு தங்கும் உரிமையை உறுதி செய்யக்கோரி தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நகர்ப்புற வறுமை ஒழிப்புத் திட்டத்துக்கு மத்திய அரசு இறுதி வடிவம் அளித்து வருவதாக அட்டர்னி ஜெனரல் தெரிவித்தபோது, குறுக்கிட்ட நீதிபதிகள் அரசின் இலவச திட்டங்களால் மக்கள் யாரும் வேலைக்கு போக விரும்புவதில்லை. எந்த வேலைக்கும் போகாமலே அரசின் பணம் கிடைத்துவிடுகிறது என்ற மனநிலையில் மக்கள் இருப்பதாக அதிருப்தி தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்