அகதிகள் முகாமில் அடைக்கப்பட்ட இளைஞர் : விடுவிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

முறையான ஆவணங்கள் இருந்து தன்னை கைது செய்து அகதிகள் முகாமில் வைத்திருப்பதாக கூறி, கொல்கத்தா மாநிலத்தை சேர்ந்த முபின் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அகதிகள் முகாமில் அடைக்கப்பட்ட இளைஞர் : விடுவிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு
Published on

முறையான ஆவணங்கள் இருந்து தன்னை கைது செய்து அகதிகள் முகாமில் வைத்திருப்பதாக கூறி, கொல்கத்தா மாநிலத்தை சேர்ந்த முபின் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவனங்கள் எதுவும் இல்லாமல், திருப்பூரில் வேலை செய்து வந்த வங்கதேச நாட்டை சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தபோது, தன்னையும் கைது செய்ததாக மனுவில் அவர் கூறியுள்ளார். இந்த மனு நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராக வழக்கை ஒத்திவைக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, விசாரணையை மார்ச் 15ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com