

அரசு இடஒதுக்கீட்டின்கீழ் மருத்துவப் படிப்பில் இடம்பிடித்த பரமக்குடியைச் சேர்ந்த மாணவிக்கு, கலந்தாய்வில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த தீக்ஷா, நீட் தேர்வில் 700க்கு 610 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தார். இவருக்கு கலாந்தாய்வு மறுக்கப்பட்டது குறித்து உயர்நீதிமன்றக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் மாணவி 10 முதல் 12ஆம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் படித்ததால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.