இளம் வழக்கறிஞர்களுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுரை

x

இளம் வழக்கறிஞர்களுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுரை

கடின உழைப்பு இருந்தால்தான் வழக்கறிஞர்கள் நன்கு வாதாட முடியும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா கூறினார்.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் வழக்கறிஞர்கள் சங்கத்தில், இளம் வழக்கறிஞர்கள் பின்பற்ற வேண்டிய தொழில் நெறிமுறைகள் என்ற தலைப்பில் அவர் பேசினார். அப்போது, வழக்கறிஞர் தொழிலில் நடத்தை மிகவும் மிக்கியமானது என்றும், கடினமாக உழைத்து வழக்கை பற்றி நன்று தெரிந்து கொண்டால்தான் நன்றாகா வாதாட முடியும் என்று கூறினார். கடினமான முக்கியமான வழக்குதான் ஒரு வழக்கறிஞரை அடையாளப்படுத்தும் என்றும் அவர் கூறினார். வழக்கை சுருக்கமாக கூறி விளங்க வைப்பதுதான் வெற்றிக்கு காரணம் என்றும், அதிதான் சிறந்த வழக்கறிஞருக்கான ஹால்மார்க் முத்திரை என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்