தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டில் பணி வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அனந்த கிருஷ்ணன் உள்ளிட்ட 80 பேர் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், விண்ணப்பங்களில், தமிழ் வழியில் படித்ததாக குறிப்பிட்டிருந்தவர்களை மட்டும், தேர்வு செய்து, உரிய நடைமுறைகளை பின்பற்றி நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.