

தேனி மாவட்டம் மேகமலை வனப்பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக சின்னச்சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மேலும், ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரோடு கற்களும் விழுவதால், அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மேகமலை வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர். இதனையடுத்து ஆக்ரோஷமாக கொட்டும் சின்னச்சுருளி அருவியை தூரத்தில் இருந்தவாரே சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர்.